ம.பி.: வாயில் பட்டாசு வெடிக்க முயன்ற ராணுவ வீரர் பலி

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, பட்டாசு வெடிக்க முயன்ற போது 35 வயது மதிக்க தக்க ராணுவ வீரர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ம.பி.: வாயில் பட்டாசு வெடிக்க முயன்ற ராணுவ வீரர் பலி
Updated on
1 min read

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, பட்டாசு வெடிக்க முயன்ற போது 35 வயது மதிக்க தக்க ராணுவ வீரர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரியும் நிர்பய் சிங் சிங்கர், திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு மாத விடுமுறையில் கிராமத்திற்கு வந்ததாக அம்ஜேரா காவல் நிலைய பொறுப்பாளர் சிபி சிங் தெரிவித்தார். 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள அம்ஜேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜலோக்யா கிராமத்தில் திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமண விழாவில் கலந்து கொண்ட நிர்பய் சிங் சிங்கர் தனது வாயில் ராக்கெட் பட்டாசு வைத்துள்ளார். அது மேலே செல்வதுக்கு பதிலாக அவரது வாயில் வெடித்தில், சம்பவ இடத்திலேயே நிர்பய் சிங் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com