பஞ்சாப் முன்னாள் முதல்வர் மறைவு: 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக இன்று (ஏப். 26) காலமானார். அவருக்கு வயது  95.
பிரகாஷ் சிங் பாதல்  (கோப்புப் படம்)
பிரகாஷ் சிங் பாதல் (கோப்புப் படம்)
Updated on
1 min read

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக இன்று (ஏப். 26) காலமானார். அவருக்கு வயது  95.

பிரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி பஞ்சாப் அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் அரைக் கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இரு நாள்களுக்கு எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் அலுவல்களும் நடைபெறாது என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. 

சிரோன்மணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த பிரகாஷ் சிங் பாதல் 8 முறை பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்புவகித்தவர். 3 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 

மேலும்  2002 - 2007 வரை மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com