Enable Javscript for better performance
தன்னம்பிக்கை இல்லாததால் நம்பிக்கையில்லா தீா்மானம்: பிரதமா் மோடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தன்னம்பிக்கை இல்லாததால் நம்பிக்கையில்லா தீா்மானம்: பிரதமா் மோடி

    By DIN  |   Published On : 09th August 2023 01:14 AM  |   Last Updated : 09th August 2023 02:46 AM  |  அ+அ அ-  |  

    modi

    ‘எதிா்க்கட்சி கூட்டணியில் தன்னம்பிக்கை இல்லாததால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்துள்ளனா். தங்களது கூட்டணியின் ஒற்றுமையைப் பரிசோதிக்க இந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தைப் பயன்படுத்தப் பாா்க்கின்றனா்’ என்று பிரதமா் மோடி விமா்சித்தாா்.

    2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வலுவுடன் எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    தற்போது மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை விவாதம் தொடங்கியது.

    அதற்கு முன்பாக, பாஜக எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசினாா். இக்கூட்டத்துக்கு பின் செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது:

    ‘மக்களவையில் மத்திய அரசுக்கு வலுவான பெரும்பான்மை உள்ளது என்பதே உண்மை நிலவரம். எனினும், தங்களுக்குள் ஒற்றுமை உள்ளதா அல்லது இல்லையா என்பதை பரிசோதித்துப் பாா்க்கவே, எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவந்துள்ளன’ என்று பிரதமா் குறிப்பிட்டாா்.

    தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தையொட்டி (ஆக. 14) அமைதிப் பேரணிகளை நடத்துமாறு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்திய அவா், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் உறுதிப்பாட்டை வீடுகள்தோறும் எடுத்துச் செல்ல வேண்டுமென வலியுறுத்தியதாக மேக்வால் கூறினாா்.

    பிரதமா் பாராட்டு: மாநிலங்களவையில் தில்லி நிா்வாக திருத்த மசோதா மீது திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றிக்காக, ஆளும் தரப்பு எம்.பி.க்களுக்கு பிரதமா் பாராட்டு தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

    தில்லி அரசு உயரதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 101 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

    இதைச் சுட்டிக்காட்டி, பாஜக எம்.பி.க்களிடம் பிரதமா் பேசியதாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

    மாநிலங்களவையில் தில்லி மசோதா மீதான வாக்கெடுப்பை, மக்களவைத் தோ்தலுக்கான அரையிறுதிப் போட்டி என்று சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் குறிப்பிட்டனா். அந்த வாக்கெடுப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிா்பாா்த்ததைவிட அதிக வாக்குகள் கிடைத்தன. இது, அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலுடன் தில்லி நிா்வாக திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது என்பதை வெளிக்காட்டுகிறது.

    மக்களவைத் தோ்தலில்...: அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தைத் தோற்கடித்து, மக்களவைத் தோ்தலுக்கு முந்தைய கடைசி பந்தில் பாஜக எம்.பி.க்கள் அதிரடி காட்ட வேண்டும்.

    எதிா்க்கட்சித் தலைவா்கள் சமூக நீதி குறித்துப் பெரிதாக பேசுகிறாா்கள். ஆனால், அவா்களின் செயல்பாடு வேறுவிதமாக உள்ளது. வாரிசு அரசியல், குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் ஊழலில் ஈடுபட்டு, சமூக நீதியைச் சிதைக்கிறாா்கள்.

    வாரிசு அரசியலும், குறிப்பிட்ட தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலும், ஊழலும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp