புதுதில்லி: கடந்த 100 நாட்களாக மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்களவையில் எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சி தலைவா்கள் மணிப்பூா் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டவிதம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இதைத் தொடா்ந்து மத்திய அமைச்சா் அமித் ஷா, வன்முறைக்கான காரணம் குறித்தும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் சுமாா் இரண்டு மணி நேரம் பேசினாா். அப்போது, மணிப்பூரில் நிகழும் தொடா்ச்சியான வன்முறை குறித்த எதிா்க்கட்சிகளின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். வன்முறையில் நடைபெற்ற சம்பவங்கள் வெட்கக்கேடானவை. அவற்றை அரசியலாக்குவது அதைவிட வெட்கக்கேடானது. வன்முறை குறைந்த போதிலும் இரு சமூகத்தினருக்கும் இடையே நிலவும் கோபம் இன்னும் தணியவில்லை என்றாா் அமித் ஷா.
இந்த நிலையில், மணிப்பூரில் மே 3-ஆம் தேதி தொடங்கிய வன்முறை இன்றுவரை நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Ethnic cleansing is shameful, admitted the Hon'ble Home Minister. It happened under his watch
â P. Chidambaram (@PChidambaram_IN) August 10, 2023
He added that it is "more shameful" that politics is being played on it. He is wrong
Raising and debating the issue of ethnic cleansing is the duty of every citizen, especially ofâ¦
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இன அழிப்பு வெட்கக்கேடானவை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். இது அவரது கண்காணிப்பில் நடந்தது. அதில் அரசியல் செய்யப்படுவது மிகவும் வெட்கக்கேடானவை என்றும் அவர் கூறினார். அதுவும் அவர் தவறு.
இன அழிப்பு பிரச்னையை எழுப்புவதும் விவாதிப்பதும் ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.
மேலும், கடந்த 100 நாட்களாக மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத்

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

எனது சான்றிதழைக் காட்டுகிறேன், அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காட்டுவாரா? அபிஜீத் தீப்கே

விரைவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



