அமர்நாத்: வாரத்தில் 3 நாள்கள் மட்டும் சுவாமி தரிசனம்!

அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால் ஒரு நாள் விட்டு ஒருநாள் மட்டும் அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால்  ஒரு நாள் விட்டு ஒருநாள்(அதாவது மாற்று நாள்களில்) மட்டும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதுவரை 4.30 லட்சம் பயணிகள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை 1,600-க்கும் மேற்பட்டார் குகைக் கோயிலில் தரிசனம் செய்தனர். 736 ஆண்கள், 151 பெண்கள், 25 சாதுக்கள் மற்றும் 3 சாத்வீக்கள் உள்பட 915 பயணிகள் கொண்ட குழு பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றனர். 

62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com