திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஹிமாசல் நிலச்சரிவில் 6 வயது சிறுவன் பலி: நெடுஞ்சாலை மூடல்! 

ஹிமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :12 ஆகஸ்ட் 2023, 3:20 pm IST

ஹிமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியானான். 

குலு மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது கற்கள் மற்றும் பாறைகள் விழுந்தது. இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மண்டி மாவட்டத்தின் சுந்தர்நகரைச் சேர்ந்த குடும்பத்தினர் குலுவில் இருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

சோலன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை-5 இல் உள்ள சிம்லா-கல்கா நெடுஞ்சாலை மூடப்பட்டது. மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.