திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ராஜஸ்தானில் ரூ.11 கோடியில் சைபர் கிரைம் விசாரணை மையம்: முதல்வர் ஒப்புதல்!

ராஜஸ்தான் காவலர் பயிற்சி அகாடெமியில் ரூ.11.73 கோடி செலவில் சைபர் கிரைம் விசாரனை மையம் அமைக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2023, 8:14 pm IST

ராஜஸ்தான் காவலர் பயிற்சி அகாடெமியில் ரூ.11.73 கோடி செலவில் சைபர் கிரைம் விசாரனை மையம் அமைக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த புதிய சைபர் கிரைம் விசாரணை மையத்தில் காவல் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்த பயிற்சி வழங்கப்படும். இந்த சைபர் கிரைம் விசாரணை மையம் மத்திய விசாரணை அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து தேவையான தகவல் குறித்து கலந்தாலோசிக்கலாம். சைபர் கிரைம் விசாரணை மையத்துடன் ரூ.7.50 கோடி செலவில் 400 மீட்டர் நீளமுள்ள ஓட்டப்பந்தய டிராக்குகளும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டப் பந்த டிராக் அமைக்கும் திட்டத்தை 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.