சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ஜெயிலர் படம் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!

தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து ரஜினி ஜெயிலர் படத்தை கேளர முதல்வர் பினராயி விஜயனும் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

Published On :

தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து ரஜினி ஜெயிலர் படத்தை கேளர முதல்வர் பினராயி விஜயனும் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிக்குப் பிறகு, விநாயகன் ஷிவ ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பும் பேசப்பட்டு வருகிறது. ஜெயிலர் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில், குடும்பத்துடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு ஜெயிலர் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். முன்னதாக இப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் நெல்சனை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.