விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே எலுரு அரசு மருத்துவமனையில், அறுவைசிகிச்சை முறையில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் கத்தியை வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க.. பிகார் கொத்தனார்களால்தான் இப்படி.. ஹிமாசல முதல்வர் சொன்னது என்ன?
சிசேரியன் முறையில் குழந்தை பெற்ற பெண், வீடு திரும்பிய பிறகும், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டபோது, வேறு ஒரு மருத்துவமனையில் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர்கள் பயன்படுத்திய கத்தியை, வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்துவிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க.. உங்கள் வாட்ஸ்-ஆப்பில் இந்த வசதி வந்துவிட்டதா?
உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, கத்தியை வெளியே எடுத்தனர். இது குறித்து எலுரு மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த ஸ்வப்னாவுக்கு ஆகஸ்ட் மாதம் தான் அறுவை சிகிச்சை செய்து கத்தி அகற்றப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அவர் வயிற்று வலியுடன் அவதிப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், 2 இன்ச் அளவுள்ள கத்தியால், அவரது பெருங்குடலில் தொற்று பாதித்து அப்பகுதியும் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. வெறும் வயிற்றுவலி என்று பெண் இருந்திருந்தால் அவரது உயிரே பறிபோயிருக்கும் என்று அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை
ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது வழக்கு

நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்







