நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட கத்தி: சிசேரியனின் போது பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

அறுவைசிகிச்சை முறையில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் கத்தியை வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 5:50 pm IST


விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே எலுரு அரசு மருத்துவமனையில், அறுவைசிகிச்சை முறையில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் கத்தியை வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிசேரியன் முறையில் குழந்தை பெற்ற பெண், வீடு திரும்பிய பிறகும், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டபோது, வேறு ஒரு மருத்துவமனையில் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர்கள் பயன்படுத்திய கத்தியை, வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்துவிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, கத்தியை வெளியே எடுத்தனர். இது குறித்து எலுரு மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த ஸ்வப்னாவுக்கு ஆகஸ்ட் மாதம் தான் அறுவை சிகிச்சை செய்து கத்தி அகற்றப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அவர் வயிற்று வலியுடன் அவதிப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், 2 இன்ச் அளவுள்ள கத்தியால், அவரது பெருங்குடலில் தொற்று பாதித்து அப்பகுதியும் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. வெறும் வயிற்றுவலி என்று பெண் இருந்திருந்தால் அவரது உயிரே பறிபோயிருக்கும் என்று அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.