வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ஸ்டெம் கல்வி உதவித்தொகைக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 7:20 pm IST

புதுதில்லி: இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் ஏழை மாணவிகளுக்கு ஸ்டெம் ஸ்காலர்ஷிப் திட்டத்தை தொடங்க ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, புகழ்பெற்ற கல்லூரிகளிலிருந்து ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் ஏதேனும் ஒன்றில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் 2,000 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

'ஸ்டெம் ஸ்டார்ஸ்' ஸ்காலர்ஷிப், ஸ்டெம் படிப்பு காலத்திற்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவுகள் மற்றும் படிப்பு பொருட்களை ஈடுசெய்ய உதவும் என்று இன்போசிஸ் அறக்கட்டளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் அறக்கட்டளை அறங்காவலர் சுமித் விர்மானி இதுபற்றி கூறுகையில், இந்தியாவில் நிலவும் வறுமையால் பல இளைஞர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகின்ற நிலையில் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான், 'ஸ்டெம் ஸ்டார்ஸ்' ஸ்காலர்ஷிப் திட்டம் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு ஒரு முழுமையான கல்வி சூழலை வழங்க முயல்கிறது என்றார்.

இந்நிலையில், அதன் தொடக்க ஆண்டில், இந்த உதவித்தொகையானது ஐ.ஐ.டி, பிட்ஸ்-பிலானி, என்.ஐ.டி. மற்றும் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய என்.ஐ.ஆர்.எஃப் (தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு) அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை உள்ளடக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.