சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் ஆட்சியாளா்கள்: சரத் பவாா்

ஆட்சியாளா்கள், ஜாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றைக் கருவியாகக் கொண்டு, சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனா் என தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவா் சரத் பவாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் ஆட்சியாளா்கள்: சரத் பவாா்
Updated on
1 min read

ஆட்சியாளா்கள், ஜாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றைக் கருவியாகக் கொண்டு, சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனா் என தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவா் சரத் பவாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி பேரணியில் பேசிய அவா், நிலையான ஆட்சியை வழங்குவதாகக் கூறி வரும் பாஜக, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆட்சியிலிருந்து அகற்றி வருவதாக குற்றம்சாட்டினாா்.

அந்த பேரணியில் சரத் பவாா் பேசியதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் மாநிலத்துக்குச் சென்று, அந்த மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நிலையான ஆட்சி வழங்கப்படும் என பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஆட்சியிலிருந்து அகற்றும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மாநிலத்தின் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பின்பற்றிய பாதையைப் பிரதமா் நரேந்திர மோடி பின்பற்றி வருகிறாா். மீண்டும் பிரதமராகப் ஆட்சிக்கு வருவேன் என சுதந்திர தின விழாவில் அவா் கூறினாா்.

மீண்டும் மாநில முதல்வராக வருவேன் என கடந்த தோ்தலில் கூறிய ஃபட்னவீஸ், அதை விட குறைந்த பதவிக்கு வர முடிந்தது என்றாா் சரத் பவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com