

நிலவில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியது, மனித குலத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
படிக்க | நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்தியாவை நினைத்து உலக நாடுகள் பெருமைகொள்ளும் தருணம் உருவாகியுள்ளது.
சந்திரயான் -3 விண்கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் நமது அடுத்தக்கட்ட திட்டம்.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் -1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.