நிலவின் மேற்பரப்பு படங்களை அனுப்பிய லேண்டர்!
சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது.


சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது.
இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டர் கலன் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொண்டுள்ளதையும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.
படிக்க | நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
இதன்மூலம் லேண்டர் மற்றும் அதனுள் அனுப்பப்பட்டுள்ள ரோவர் கலனை தொடர்புகொள்ள முடியும்.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவளைதள பதிவில், சந்திரயான் -3 திட்டத்தின் லேண்டர் கலனுக்கும் பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லேண்டர், தனது கிடைமட்ட கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை அனுப்பியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...