சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது.
இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டர் கலன் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொண்டுள்ளதையும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.
படிக்க | நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
இதன்மூலம் லேண்டர் மற்றும் அதனுள் அனுப்பப்பட்டுள்ள ரோவர் கலனை தொடர்புகொள்ள முடியும்.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவளைதள பதிவில், சந்திரயான் -3 திட்டத்தின் லேண்டர் கலனுக்கும் பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லேண்டர், தனது கிடைமட்ட கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை அனுப்பியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.