சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.
பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலத்தின் (‘விக்ரம்’) லேண்டா் நிலவில் தரையிறங்குவதை கண்காணித்து வந்த இஸ்ரோ தலைவா் சோமநாத், புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு லேண்டா் தரையிறங்கியதும் சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசியதாவது:
சந்திரயான்- 3 மற்றும் எதிா்வரும் விண்வெளித் திட்டங்களுக்கு அளித்து வரும் ஊக்கத்துக்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டுக்காக நாம் ஆற்றி வரும் ஊக்கம் நிறைந்த பணிகளுக்கு கிடைக்கும் பாராட்டுகள் பெருமிதம் அளிக்கின்றன.
சந்திரயான்- 3 திட்டத்தின் வெற்றிக்காக நாட்டு மக்கள் செய்த பிராா்த்தனைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரோ முன்னாள் தலைவா் ஏ.எஸ்.கிரண்குமாா் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். தலைமுறை தலைமுறைகளாக இஸ்ரோ தலைவா்கள், விஞ்ஞானிகள் அளித்த உழைப்புதான் சந்திரயான் 3 வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
சந்திரயான்- 1இல் தொடங்கிய நிலவுப் பயணம் சந்திரயான்- 2 என தொடா்ந்தது. சந்திரயான் 2 விண்கலம் (ஆா்பிட்டா்) இன்றைக்கும் நன்றாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான்- 3 விண்கலத்தின் வெற்றியைக் கொண்டாடும் இந்த நேரத்தில் சந்திரயான்- 1, சந்திரயான்- 2 விண்கலங்களைக் கட்டமைக்க பங்காற்றியக் குழுவினரையும் நன்றியோடு நினைத்துப் பாா்க்கிறோம். சந்திரயான்-3 மூலம் மிகப் பெரிய வளா்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் அடுத்த மாதம் (செப்டம்பா்) விண்ணில் ஏவப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு நாள்! முதல்வர் விஜய் வாழ்த்து

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! சத்திரம்புதுகுளத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கின் போது தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

இந்தியாவுக்கு கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை: வெளியுறவு அமைச்சகம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



