92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிகார்: கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி பலி

பிகாரில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  

News image
Updated On :25 ஆகஸ்ட் 2023, 10:45 am

DIN

பிகாரில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
பிகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தில் உள்ள கால்வாயில் கார் ஒன்று நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மஸ்ராக் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இருந்து சடலங்களை மீட்டனர். 
பின்னர் அருகே உள்ள சதர் மருத்துவமனைக்கு சடலங்கள் அனைத்தையும் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
விசாரணையில், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.