
கோப்புப் படம்
கொச்சியிலிருந்து பெங்களூரு சென்ற இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பையடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
இன்று காலை 6E6482 என்ற விமானம் பெங்களூருவுக்கு காலை 10.30-க்கு புறப்பட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து உடனே, சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இறக்கிவிடப்பட்டன.
படிக்க: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்த குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து சம்பவ இடத்துக்கு சோதனை செய்ய மோப்ப நாய் குழுவும் வரவழைக்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பிறகு பெங்களூருக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...