தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி நியமனம்! 

தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 
தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி நியமனம்! 

தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

மாநில அலகுகளில் நிறுவன மறுசீரமைப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஷீலா தீட்சித் அரசில் முன்னாள் அமைச்சரான லவ்லியை தேசிய தலைநகரில் கட்சியின் கமிட்டி தலைவராக நியமித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2017இல் பாஜகவில் சேர்ந்த லவ்லி, சில மாதங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு தலைவராக அனில் சௌத்ரிக்குப் பதிலாக அரவிந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

பதவி விலகும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அனில் சௌத்ரியின் பங்களிப்பை அக்கட்சி பாராட்டியதாக ஏஐசிசி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com