இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆயுர்வேத மருத்துவர் மர்ம மரணம்... காரணம் என்ன?

இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மருத்துவர் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்து கிடந்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN

மைசூரு: கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் குஷல்நகர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவர், காருக்குள் இறந்து கிடந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

இறந்தவர் மருத்துவர் சதீஸ் (40) என்றும் விஷம் அருந்தி அவர் இறந்திருக்கலாம் எனவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர். 

சமீபத்தில், பெங்களூரு காவல் துறை கண்டறிந்த பெண் சிசு கொலை கும்பலுடன் இவரும் தொடர்பில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுறது.

இதற்கிடையில் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் மருத்துவர்கள்.

இந்தக் கும்பல் 900-க்கும் அதிகமான பெண் சிசு கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக பெங்களூரு காவல் ஆணையர் பி தயானந்தா தெரிவித்துள்ளார்.

மண்டியா பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையை அமைத்து இந்தக் கும்பல் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்தரித்திருக்கும் பெண்களை அணுகி சிசு எந்த பாலினத்தைச் சேர்ந்தது என்பதையறிய விரும்புகிறீர்களா என தங்கள் வலைக்குள் இழுத்து பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்யும் வேலையை செய்து வந்துள்ளனர்.

இதற்கு கட்டணமாக 20 முதல் 25 ஆயிரம் ஒவ்வொருவரிடம் வாங்கியுள்ளனர் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்தது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.