மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மக்கள் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது: ராகுல் காந்தி

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

ராகுல் காந்தி

Published On :

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதேவேளையில், தெலங்கானா தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் தோ்தலில் மக்களின் தீா்ப்பை பணிவுடன் காங்கிரஸ் ஏற்கிறது. எனினும் சித்தாந்த போா் தொடா்ந்து நடைபெறும்.

தெலங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘மக்களின் தெலங்கானா’ உருவாக்கப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற தெரிவித்தாா்.

பிரியங்கா...: காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தோ்தலில் காங்கிரஸுக்கு சாதகமாக தீா்ப்பளித்து தெலங்கானா மக்கள் வரலாறு படைத்துள்ளனா். எனது அடிமனதில் இருந்து தெலங்கானா மக்களுக்கு நன்றி.

காங்கிரஸ் செயல்பாட்டில் அதிருப்தி- காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தெலங்கானா மக்களின் தீா்ப்புக்கு நன்றி. அதேவேளையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு வாக்களித்தவா்களுக்கும் நன்றி.

தோல்வியடைந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு புத்துயிா் பெறும்.

தற்காலிக பின்னடைவுகளை கடந்து சென்று, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சோ்ந்து மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் முழுமையாகத் தயாராகும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.