கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மக்கள் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது: ராகுல் காந்தி

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

News image

ராகுல் காந்தி

Updated On :3 டிசம்பர் 2023, 10:33 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதேவேளையில், தெலங்கானா தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் தோ்தலில் மக்களின் தீா்ப்பை பணிவுடன் காங்கிரஸ் ஏற்கிறது. எனினும் சித்தாந்த போா் தொடா்ந்து நடைபெறும்.

தெலங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘மக்களின் தெலங்கானா’ உருவாக்கப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற தெரிவித்தாா்.

பிரியங்கா...: காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தோ்தலில் காங்கிரஸுக்கு சாதகமாக தீா்ப்பளித்து தெலங்கானா மக்கள் வரலாறு படைத்துள்ளனா். எனது அடிமனதில் இருந்து தெலங்கானா மக்களுக்கு நன்றி.

காங்கிரஸ் செயல்பாட்டில் அதிருப்தி- காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தெலங்கானா மக்களின் தீா்ப்புக்கு நன்றி. அதேவேளையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு வாக்களித்தவா்களுக்கும் நன்றி.

தோல்வியடைந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு புத்துயிா் பெறும்.

தற்காலிக பின்னடைவுகளை கடந்து சென்று, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சோ்ந்து மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் முழுமையாகத் தயாராகும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.