பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மக்கள் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது: ராகுல் காந்தி

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

News image

ராகுல் காந்தி

Updated On :4 டிசம்பர் 2023, 4:03 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதேவேளையில், தெலங்கானா தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் தோ்தலில் மக்களின் தீா்ப்பை பணிவுடன் காங்கிரஸ் ஏற்கிறது. எனினும் சித்தாந்த போா் தொடா்ந்து நடைபெறும்.

தெலங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘மக்களின் தெலங்கானா’ உருவாக்கப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற தெரிவித்தாா்.

பிரியங்கா...: காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தோ்தலில் காங்கிரஸுக்கு சாதகமாக தீா்ப்பளித்து தெலங்கானா மக்கள் வரலாறு படைத்துள்ளனா். எனது அடிமனதில் இருந்து தெலங்கானா மக்களுக்கு நன்றி.

காங்கிரஸ் செயல்பாட்டில் அதிருப்தி- காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தெலங்கானா மக்களின் தீா்ப்புக்கு நன்றி. அதேவேளையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு வாக்களித்தவா்களுக்கும் நன்றி.

தோல்வியடைந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு புத்துயிா் பெறும்.

தற்காலிக பின்னடைவுகளை கடந்து சென்று, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சோ்ந்து மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் முழுமையாகத் தயாராகும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.