நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து விவாதிக்க காங். எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்

News image
Updated On :4 டிசம்பர் 2023, 11:04 am IST

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் திங்கள்கிழமை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

கத்தாரின் டோஹாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் அந்நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து கத்தார் நீதிமன்றம் அவர்கள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.

ஆனால் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் விவரங்கள் கூட வெளியிடப்படாமல் அந்நாட்டு அரசால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 8 பேரையும் மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்தார்.

கத்தார் அரசு விசாரணை நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்பு விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல், ரகசியமாக வைத்திருப்பது குறித்து கடந்த மாதம் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தற்போது நாடாளுமன்ற மக்காவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.