எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரூ.15,186.64 கோடி மதிப்பிலான சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளது: நிர்மலா சீதாராமன்

ரூ.15,186.64 கோடி மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :5 டிசம்பர் 2023, 3:59 pm IST

ரூ.15,186.64 கோடி மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.15,186.64 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும், இவை அனைத்தும் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார். 

மாநிலங்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் மூலம்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இதன் விளைவாக, அதிகளவிலான பணம் வங்கிகளுக்குத் திரும்புகிறது" எனக் கூறினார்.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, 13,978 கடன் கணக்குகளுக்கு எதிராக சட்டப்பூர்வ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 11,483 வழக்குகளில் சர்ஃபேசி(SARFAESI) சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, 5,674 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள்(FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. 

போன் பேங்கிங்(Phone Banking) மூலம் கடன்பெற விரும்பும் மக்களுக்கு தகுதி போன்றவற்றை பாராமல்  கடன் வழங்கப்பட வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.