மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

3 மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுக்கும் குழு: பாஜக அறிவிப்பு!

பாஜக வெற்றி பெற்ற மாநிங்களில் முதல்வர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை இந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 டிசம்பர் 2023, 11:29 am

புது தில்லி: பாஜக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கான முதல்வர்கள் யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது.

முதல்வர்களைத் தேர்வு செய்ய அரசியல் கவனிப்பாளர்கள் அடங்கிய குழு அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என பாஜக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டா மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்நாத் சிங் உடன் சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்துக்க அனுப்பப்படவுள்ளனர்.

சத்தீஸ்கருக்கு முண்டா உடன் மத்திய அமைச்சர் சர்பனாந்தா சோனோவால், துஷ்வந்த் குமார் ஆகியோர் அரசியல் கவனிப்பாளர்களாகச் செல்லவுள்ளனர்.

மத்திய பிரதேசத்துக்கு கட்டார் உடன் கே லக்‌ஷ்மண் மற்றும் ஆஷா லக்ரா ஆகியோர் அனுப்பப்படவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.