370-வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று (டிசம்பர் 11) உச்சநீதிமன்றம் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இதனைக் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “370வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் முக்கியமான முடிவை எடுத்தார்.
அன்று முதல் ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பியுள்ளது. வன்முறையை மட்டுமே சந்தித்துவந்த பள்ளத்தாக்கு மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர். சுற்றுலா மற்றும் வேளாண் துறையின் வளர்ச்சி ஜம்மு-காஷ்மீர் மக்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது.
370-வது சட்டப்பிரிவை நீக்குவதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஏராளமான உறுப்பினர்கள் இந்தியா அளித்துள்ள வாக்குறுதியை மீறக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் அந்த சட்டப்பிரிவால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
இந்த சட்டப்பிரிவுதான் பெண்களுக்கு எதிரான, தலித் மக்களுக்கு எதிரான மற்றும் வளர்ச்சிக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு வேர் ஆகும். இந்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசின் முடிவு சரியானது என்று இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது.” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு நீக்கியது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!

சங்க இலக்கியத்தில் கானல் நீர் - கனைகதிர் ஆவி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



