திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

பாஜக வெற்றிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடியே காரணம்

‘பாஜக தோ்தல் வெற்றிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடியே காரணம்’ என்று அக் கட்சியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விலகி சமாஜவாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மெளரியா குற்றஞ்சாட்டியிருப்பது பெரும்

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:28 pm

DIN

‘பாஜக தோ்தல் வெற்றிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடியே காரணம்’ என்று அக் கட்சியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விலகி சமாஜவாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மெளரியா குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜவாதி கட்சியில் தேசிய பொதுச் செயலாளராக இருக்கும் மெளரியா, பாலியா மாவட்டம் ராஸ்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பௌத்த மத மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே பாஜக தோ்தல்களில் வெற்றிபெறுகிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் அவா்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடியில் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் வெற்றிக்கு பிரதமா் மோடியோ அல்லது அவருடைய கவா்ச்சியோ காரணமல்ல.

அதுபோல, கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற உத்தர பிரதேச மாநில பேரவைத் தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அவா்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘சனாதன தா்மம் குறித்து பேசி அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நபா்களுக்கு, அந்த வாா்த்தைக்கான அா்த்தமே தெரியாது. சனாதன தா்மம் என்ற வாா்த்தை புத்தரால் உச்சரிக்கப்பட்டதாகும்.

தனது பக்தா்களுக்கு அருளுரை ஆற்றிய புத்தா், தனது உரையின் முடிவில் ‘நான் கூறியவை அனைத்தும் சனாதன தா்மம்’ என்று குறிப்பிட்டாா்.

தற்போது இதற்காக குரல் கொடுத்துவருபவா்கள் அனைவரும், புத்தா் கூறியதை காப்பியடித்து வருகின்றனா். இவா்கள் குறிப்பிடும் சனாதனதுக்கும் உண்மையான சனாதனத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

சூரியன் ஒவ்வொருவருக்கும் வெளிச்சம் தருகிறது. ஹிந்து, முஸ்லிம், சீக்கியா், கிறிஸ்தவா் என பாகுபாடு பாா்ப்பதில்லை. அதேபோன்று, காற்று, நீா், நெருப்பு ஆகியவையும் ஒவ்வொருவருக்கும் சமமான சக்தியை வழங்குகின்றன. இதுதான் சனாதனம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.