அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எம்.பி.க்கள் இடைநீக்கம்: தீர்மானம் நிறைவேற்றம்; இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம்!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு முதல்முறையாக இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :19 டிசம்பர் 2023, 1:32 pm

DIN

இந்தியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

தில்லியில் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச. 19) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகள் பங்கேற்றன. தமிழகத்திலிருந்து திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். 

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு முதல்முறையாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Story image

சுமார் 3 மணிநேரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 

இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் சுமூகமாக நடந்தது. 3 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விஷயங்களையும் விவாதித்தோம்.

Story image

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்திய வரலாற்றில் 151 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். இது மிகவும் தவறான அணுகுமுறை. இதற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். 

கட்டட திறப்பு விழாவுக்குச் செல்லும் பிரதமர் நாடாளுமன்றம் வர மறுக்கிறார். 
நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக பிரதமர், உள் துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.