தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஹைதராபாத்தில் இருந்து வரும் கதவுகள்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்துள்ளன.

Published On :6 பிப்ரவரி 2024, 7:02 pm IST

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்துள்ளன.

அயோத்தியில் அமையும் ராமர் கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கட்டுமானப் பொருள்கள் வந்து சேர்ந்துள்ளன.  அதன்படி, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோயிலுக்குத் தேவையான மணிகள் சென்றடைந்தன.

அந்த வகையில், தங்கப் பட்டை வேயப்பட்ட மரக் கதவுகள் ஹைதராபாத்திலிருந்து செர்லகறிது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கதவுகளை தயாரித்து வரும் தனியார் நிறுவனம், கோயிலின் அனைத்து சன்னதிகளையும் மூடுவதுற்கு 118 மரக்கதவுகளை தயாரித்து வருகிறது.

இன்னும் ஏராளமான கதவுகளை தயாரிக்கத் தயாராக இருப்பதாகவும், 9 அடி உயரமுள்ள 18 கதவுகள் தயாராகியிருப்பதாகவும், அவை ஜனவரி 1ஆம் தேதி கோயிலில் பொருத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பணிக்கு பல்வேறு நிறுவனங்களிடையே போட்டி போட்டு, தங்கள் திறமையை நிரூபித்து, ஹைதராபாத் தனியார் நிறுவனம் இந்தப் பணியை பெற்றிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமா் கோயில், பிரத்யேக குடிநீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுடன் அமைய பெற்ற ‘சுயசாா்பு’ வளாகமாக இருக்கும் என கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறியுள்ளார்.

மேலும், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தியில் ஸ்ரீ ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூலவரான குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை, ஜனவரி 21, 22-ஆகிய தேதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளா் சந்திப்பு நடைபெற்றது.

பணிகளை விவரித்து அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறுகையில், ‘70 ஏக்கா் கோயில் வளாகத்தில் 70 சதவீதம் பசுமையான பகுதியாக அமைக்கப்படும். இரண்டு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், ஒரு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், பிரத்யேக மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு ஆகியவை அமைந்த ராமா் கோயில் சுயசாா்பு வளாகமாக இருக்கும்.

அதேபோல், கோயில் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புப் படை பணியமா்த்தப்படுவா். கோயிலுக்காக அமைக்கப்பட்ட நிலத்தடி நீா்த்தேக்கத்திலிருந்து பெறும் நீரை இவா்கள் பயன்படுத்துவாா்கள்.

கோயில் வளாகத்தில் மின்தூக்கி (லிஃப்ட்) வசதியும் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நுழைவாயிலில் இரண்டு சாய்வுதளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலில் 392 பிரம்மாண்ட தூண்கள் இருக்கும். அயோத்தியில் உள்ள குபோ் திலாவில் ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது’ என்றாா்.

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் மூலவா் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.