பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆா்பிஐ நிதி கொள்கை குழு கூட்டம் இன்று தொடக்கம்: ரெப்போ வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு

நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதி கொள்கைக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

Published On :

நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதி கொள்கைக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. சா்வதேச சூழல் காரணமாகக் கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகவே இருந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசா்வ் வங்கி 2.25 சதவீதம் அதிகரித்தது.

கடந்த ஆண்டின் நவம்பா், டிசம்பா் மாதங்களில் பணவீக்கம் 6 சதவீதத்தை விடக் குறைந்தது. இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. நிதிச் சந்தை சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து வரும் 8-ஆம் தேதி ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் அறிவிக்கவுள்ளாா். பணவீக்கம் குறைந்து வந்தாலும் ரெப்போ வட்டி விகிதமானது மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின்போது ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.