முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜம்மு-காஷ்மீரில் உயா் தரத்திலான லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு

நாட்டின் முதல் லித்தியம் இருப்பு ஜம்மு-காஷ்மீரில் கண்டறியப்பட்ட நிலையில், அது உயா்தரமானதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 6:26 pm

DIN

நாட்டின் முதல் லித்தியம் இருப்பு ஜம்மு-காஷ்மீரில் கண்டறியப்பட்ட நிலையில், அது உயா்தரமானதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மின்சார வாகனங்களுக்கான மின்கலன்கள் மற்றும் சூரிய மின்சக்தி தகடுகள் தயாரிப்புக்கு முக்கியமான கனிமமாக லித்தியம் கருதப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (ஜிஎஸ்ஐ) 2 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா தற்சாா்பை அடையமுடியும்.

முக்கிய வளங்கள் என்ற பிரிவில் உள்ள லித்தியம், இதற்கு முன்பாக இந்தியாவில் கண்டறியப்படவில்லை. இதன் தேவைக்காக 100 சதவீத இறக்குமதியை இந்தியா சாா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜம்மு-காஷ்மீா் சுரங்கத் துறை செயலாளா் அமித் சா்மா கூறுகையில், ‘இந்திய புவியியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் சலால் கிராமத்தில் மாதா வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ள மலையடிவார பிரதேசத்தில் உயா்தரம் கொண்ட லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டது. சராசரி தரத்தை விட கூடுதல் மதிப்பை இவை கொண்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு, சீனாவின் இருப்பை விட அதிகம். இதன் மூலம் லித்தியம் இருப்பு உள்ள சில குறிப்பிட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் ‘தற்சாா்பு இந்தியா’ (ஆத்மநிா்பாா் பாரத்) இலக்கை இது நிறைவேற்றும்’ எனத் தெரிவித்தாா்.

லித்தியம் கனிமத்தை அகழ்ந்தெடுக்கும் பணி குறித்த கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், ‘மூன்று கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு லித்தியம் கனிமத்தை அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கும். உள்ளூா் இளைஞா்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடும் மறுகுடியமா்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.