பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பத்து வழிச் சாலையில் இந்தா ஆறு இங்க இருக்கு.. மிச்சம் நான்கு எங்கே?

விரைவுச் சாலையின் முதல் கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அச்சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 6:16 pm IST

தில்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அச்சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு என்று புகழாரம் சூட்டி இந்த மிக நீண்ட விரைவுச் சாலையின் விடியோவை இணைத்திருந்தார். ஆனால் மக்களோ, ஆறு சாலைகள் இருக்கின்றன. மிச்சம் 4 சாலைகள் எங்கே என்று கேட்டு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

பெங்களூரு - மைசூரு இடையே இணைப்பை உருவாக்கும் பத்து வழி விரைவுச் சாலையின் விடியோவில் ஆறு வழிப்பாதை மட்டுமே இருப்பதாக எண்கள் இட்டு புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

டிரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட அந்த விடியோவில், தரைப்பகுதியில் வந்தே பாரத் விரைவு ரயில் ஓடிக் கொண்டிருக்க, மேலே விரைவுச் சாலையில் வாகனங்கள் விரைகின்றன. கர்நாடகத்தின் கணிக்க முடியாத வளர்ச்சி என்று அதனை பசவராஜ் பொம்மை குறிப்பிட்டிருந்தார். இதனை நரேந்திர மோடியும் டேக் செய்திருந்தார். ஆனால், பொதுமக்களில் சிலரோ, காணாமல் போன மிச்சம் நான்கு சாலைகள் எங்கே என்று கேட்டு கருத்துகளை பதிவிட்டுக் கொண்டிருந்தனர். 

திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில், ஒப்பந்ததாரர்கள் எடுத்துக் கொண்ட 40 சதவீத கழிவு போக மிச்சத்தைத்தான் மக்கள் விடியோவில் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.  சிலர், அந்த இரண்டு ரயில் வழித்தடங்களைக் கூட்டினால் கூட எட்டுதானே வருகிறது என்று கேட்டிருக்கிறார்கள்.

சிலரோ, எளிய, சாதாரண மக்களின் கண்களால் பார்க்க முடியாத சக்திக்கு அப்பாற்பட்டு இந்த நான்கு சாலைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

தில்லி-மும்பை இடையே 1,386 கி.மீ. தொலைவுக்கு விரைவுச் சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய விரைவுச் சாலையாக இது அமையவுள்ளது. இதன்மூலமாக இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறையும்.

தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த விரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.