லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் கூறியுள்ளார்.
லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால், தனது ட்விட்டர் பக்க பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு லடாக்கிற்கு அனைத்துவித கால நிலைக்கும் ஏதுவான வகையில் 4.1 கிலோமீட்டர் நீளம் ஷிங்குன்லா சுரங்கப்பாதையை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்காக ரூ.1681.51 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு லடாக் தொகுதியின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஜனஸ்கர் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் மகிழ்ச்சி, வரவேற்பு மற்றும் நன்றியையும் தெரிவித்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி
சூர்யவன்ஷி பராக்...பராக்!

கா்நாடக அமைச்சரவை அமைக்க ஆலோசனை: டி.கே.சிவகுமாா், சித்தராமையா தில்லியில் முகாம்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



