புது தில்லி: ஊடுருவியவர்களால் பெயர் மாற்றப்பட்ட வரலாற்று மற்றும் வழிபாட்டுத் தளங்களின் பெயர்களை மாற்றுவதற்கான சிறப்பு குழுவை அமைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
காட்டுமிராண்டித் தனமான வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் மதவழிபாட்டுத் தலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாட்டின் எந்தவொரு பகுதியின் வரலாற்றுச் சிறப்புகளும் அழிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க..இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
மூத்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், பெயர்மாற்றும் ஆணையம் அமைத்து, நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களின் உண்மையான அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகராத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியது. மேலும், இதன் மூலம் அந்த பிரச்னைகளுக்கு உயிர் கொடுத்து நாடு எப்போதும் கொந்தளிப்பிலேயே இருக்க வேண்டுமா? என்று கேட்டதுடன், இந்தியா, ஒரு நாளும் பழைமைகளின் கைதியாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நமது நாட்டின் ஒரு பகுதியை வெளிநாட்டினர் ஊடுருவி ஆண்டது உண்மைதான். ஆனால் அந்தப் பகுதிகளின் வரலாற்றி நாம் ஒரு போதும் அழித்துவிட முடியாது என்றும் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



