சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க- பாலியல் புகார்: ஹரியாணா அமைச்சர் சந்தீப் சிங் ராஜிநாமா
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பலியான பெண்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் 6 முதல் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட தகவலின்படி, தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 40 தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.