குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் பல்வேறு மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் சிறப்பு அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இந்த அலங்கார அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி தேர்வாகியுள்ளது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியில் தமிழகம், ஆந்திரம், மேற்குவங்கம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி தேர்வாகாத நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழக அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை(ஜன. 4) முதல் ஹால் டிக்கெட்!