மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி: 8ஆம் வகுப்பு மாணவிக்கு 'காதல் கடிதம்' எழுதிய ஆசிரியர் மீது வழக்கு

உ.பி.,யில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு 'காதல் கடிதம்' எழுதிய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :7 ஜனவரி 2023, 3:12 pm

DIN

உ.பி.,யில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு 'காதல் கடிதம்' எழுதிய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் பல்லார்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவபர் ஹரிஓம் சிங். இவர் கடந்த டிசம்பவர் மாதம் 30ஆம் தேதி 8ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு வாழ்த்து அட்டை கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்றதும் வாழ்த்து அட்டையை பிரித்துப் பார்த்த மாணவி அதிர்ச்சி அடைத்துள்ளார்.

அதில் ஆசிரியர் கைப்பட 12 வரிகளில்  எழுதிய காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது. 

உடனே இதுகுறித்து மாணவியின் தந்தைக்கு தெரிய வர ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில், ஆசிரியர் ஹரிஓம் சிங் மீது வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) குன்வார் அனுபம் சிங் தெரிவித்தார்.

இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததால், ஆசிரியர் மீது மாவட்ட கல்வி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி கவுஸ்துப் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் விபின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.