கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயது பாட்டி பற்றி பேரன் பெருமையுடன் பகிர்ந்த டிவிட்டர் பதிவு பலராலும் நெகிழ்ச்சியோடு பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. ராகுல் காந்தியை நான் கொன்றுவிட்டேன்: சொன்னது அவரே!
தனது பேரன்களுடன் சேர்ந்து 83 வயது பாட்டி கேரம் போர்டு விளையாடும் விடியோவுடன் அந்த பதிவு வெளியாகியிருக்கிறது. அக்ஷன் மாராத்தே என்பவர் பகிர்ந்திருக்கும் அந்த டிவிட்டர் பகுதிவில், 83 வயதாகும் எனது பாட்டி, புனேவில் நடந்த கேரம் போர்டு போட்டியில் இவரை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக நடுக்கமில்லாத கைகளைக் கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனி நபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. கோழிக்கறியை சமைப்பதற்கு முன் அலசவே கூடாதா? ஏன்?
அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள்
இந்தப் பதவி இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.