அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி
திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி
Updated on
1 min read

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் வந்த அழைப்பில் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பள்ளித் தரப்பிலிருந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், அம்பானி குடும்பத்தினரை கொலை செய்யப் போவதாகவும் தொலைப்பேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com