பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

குஜராத் கலவர பிபிசி ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம்

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பான பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:15 am IST

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பான பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது. அதில் மோடி குறித்து பல்வேறு ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், அந்த ஆவணப்படம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘வெறும் பிரசார நோக்கத்துக்காக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெற்றுக் கருத்துகளை மட்டுமே அந்த ஆணவப்படம் பரப்புகிறது.

ஒருபக்கச் சாா்பு, அடிப்படை ஆதாரமின்மை, காலனிய மனப்பாங்கு ஆகியவையே ஆவணப்படத்தில் வெளிப்படுகின்றன. இந்த ஆவணப்படத்தைத் தயாரித்ததற்கான பிபிசி அதிகாரிகளின் நோக்கம் வியப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அத்தகைய முயற்சிகளை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது’’ என்றாா்.

பிரிட்டன் பிரதமா் ஆதரவு:

பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்குத் தொடா்பிருப்பது பிரிட்டன் அரசுக்குத் தெரியும் என பிபிசி ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் ஹுசைன், பிரதமா் ரிஷி சுனக்கிடம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த பிரதமா் சுனக், ‘‘உலகின் எந்த மூலையிலும் இனப்படுகொலையை பிரிட்டன் ஆதரிக்காது. ஆனால், ஒரு குறிப்பிட்ட நபா் குறித்து தெரிவிக்கப்படும் சித்தரிக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக் கொள்ள இயலாது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.