விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பாஜகவில் சேருங்கள் இல்லாவிட்டால் புல்டோசர் வரும்: காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல்

பாஜகவில் சேருங்கள் இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச அமைச்சர்...

News image
Updated On :21 ஜனவரி 2023, 5:21 pm IST


போபால்: பாஜகவில் சேருங்கள் இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச அமைச்சர் ஒருவர் பேசிய விடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மத்தியப் பிரதேச மாநில ஆளும் பாஜக பஞ்சாயத் துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, ருதியாய் நகரில் நடந்த ரகோகர் நகராட்சி தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், ‘பாஜக ஆளும் மாநிலங்களில் புல் டோசர் மூலம் நீதி வழங்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அரசு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோதப் பகுதிகளை புல்டோசரை கொண்டு இடித்து வருகிறது. இந்த நடைமுறையை 'அம்மா' என்று முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அடிக்கடி பாராட்டி வருகிறார். இது குற்றம் மற்றும் குற்றவாளிகள் மீதான அவரது அரசாங்கத்தின் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின்" சின்னம்.

எனவே, "காங்கிரஸ் உறுப்பினர்கள் மெதுவாக ஆளும் பாஜகவில் சேருங்கள்; இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள். 2023-இல் நடக்கும் மத்தியப் பிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது புல்டோசர் தனது வேலையை செய்யும்" என்று  கூறினார்.

இவரது பேச்சு தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் அமைச்சர் பேசிய கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குணா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிசங்கர் விஜயவர்கியா கூறுகையில், "நிதானத்தை இழந்து பேசி வரும் அமைச்சரின் கருத்துகள் பாஜகவின் மதிப்பை கெடுத்துவிட்டதாகவும், இதன் மூலம் பாஜகவின் உண்மை முகம் தெரிந்துள்ளது. அவர் தனது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு ரகோகர் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று விஜயவர்கியா கூறினார்.

ரகோகர், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய சிங்கின் சொந்த ஊராகும், அவரது மகன் ஜெய்வர்தன் சிங் அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.