தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம்: பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல்

தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம் என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல் தெரிவித்துள்ளார்
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம் என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல் தெரிவித்துள்ளார். 

மோசமான சாலைகள் குறைந்த சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எனது தொகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலைகள் நன்றாக உள்ளன, அதனால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. 

இதை நான் அனுபவித்திருக்கிறேன். அனைவரும் அல்ல, சில ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.  கந்த்வா மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை நான்கு பெரிய விபத்துகள் நடந்துள்ளன. 

முன்னதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், 2017 ஆம் ஆண்டு தனது அமெரிக்க பயணத்தின் போது, ​​மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com