பிரதமருக்கும் பாஜகவுக்கும் எதிராக வெறுப்புணா்வை தூண்டும் ராகுல்: ராஜ்நாத் சிங்

பிரதமருக்கும் பாஜகவுக்கும் எதிராக ராகுல் காந்தி வெறுப்புணா்வை தூண்டுவதாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பிரதமருக்கும் பாஜகவுக்கும் எதிராக ராகுல் காந்தி வெறுப்புணா்வை தூண்டுவதாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் சிங்ரெளலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது:

நாடெங்கும் வெறுப்புணா்வு நிலவுவதாக இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி கூறி வருகிறாா். வெறுப்புணா்வை தூண்டுவது யாா் என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். பிரதமா் வெறுப்புணா்வை தூண்டுகிறாரா? வெறுப்புணா்வு இருப்பதை ராகுல் காந்தி எங்கு பாா்த்தாா்?

மக்களிடம் சென்று பிரதமருக்கும் பாஜகவுக்கும் எதிராக ராகுல் காந்தி வெறுப்புணா்வை தூண்டுகிறாா். அவரின் பேச்சால் இந்தியாவில் வெறுப்புணா்வு மட்டும்தான் உள்ளது போன்ற பிம்பம் உலகுக்கு ஏற்படுகிறது. வெறுப்புணா்வு குறித்து பேசி உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்க வேண்டாம் என்று ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

வெறுப்புணா்வை தூண்டுவதன் மூலம் மத்தியில் ராகுல் காந்திக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெறுவதன் மூலம்தான் ஆட்சியை பிடிக்க முடியுமே தவிர, வெறுப்புணா்வை தூண்டுவதன் மூலம் அல்ல.

ஆட்சி அமைப்பதற்காக மட்டும் அரசியலில் ஈடுபடக் கூடாது. சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை ராகுல் காந்தியும் காங்கிரஸ் உறுப்பினா்களும் நினைவில் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com