பல்லாரி: நாட்டிலேயே மிக அதிக விலை மதிப்புள்ள காகேசியன் ஷெப்பர்டு நாயைக் காண, பல்லாரி திருவிழாவில் ஏராளமானோர் திரண்டனர்.
இரண்டு நாள் பல்லாரி உத்சவ், ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், ரூ.20 கோடி மதிப்புள்ள காகேசியன் ஷெப்பர்டு நாய் பங்கேற்றது. பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான இந்த வகை நாயின் வயது 14 மாதங்கள்.
மிகவும் அரிதான இனத்தைச் சேர்ந்தது. இந்த வகை நாய்க்கு ரூ.20 கோடி விலை கொடுக்கவும் தயாராக இருந்தார் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர்.
இது குறித்து சதீஷ் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் நாட்டிலேயே மிக விலை மதிப்புடைய நாய் இது. இந்த நாயின் பராமரிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,000 செலவாகிறது. பெங்களூருவிலிருந்து பல்லாரிக்கு மிகவும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட குளிர்சாதனம் பொருத்தப்பட்ட காரில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது என்னிடம் இரண்டு காகேசியன் ஷெப்பர்டு வகை குட்டிகள் உள்ளன. அவற்றை தலா 5 கோடிக்கு வாங்க பலரும் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்சவத்தில் தனது நாயுடன் பங்கேற்க வருமாறு சதீஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.