6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடிபோதையில்.. பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த மும்பைப் பெண்

மும்பை வாழ்ந்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் தவறுதலாக, பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
குடிபோதையில்.. பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த மும்பைப் பெண்
Updated On :23 ஜனவரி 2023, 10:59 am

DIN

மும்பை வாழ்ந்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் தவறுதலாக, பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய மக்களின் ருசி என்பது அலாதியானது. காரம், புளிப்பு, இனிப்பு என எண்ணற்ற ருசிகளில் ஏராளமான உணவு வகைகள் உள்ளன. ஆனால் என்ன, பிரியாணி என்ற ஒற்றைச் சொல், ஒட்டுமொத்த அசைவ மக்களின் நாவையும் அடிமையாக்கி வைத்திருக்கிறது.

இது பரவலாக தெரியப்பட்டாலும் கூட, ஆன்லைன் மூலம் உணவு வாங்கிச் சாப்பிடும் கலாசாரம் வந்த பிறகு, அது புள்ளிவிவரமாகவே அவ்வப்போது வெளியாகி வருகிறது.

உணவு டெலிவரி செய்யும் சோமாட்டோ, கடந்த 2022ஆம் ஆண்டும், அதற்கு முன்பும் கூட,  அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி இருந்ததாகத் தெரிவித்துள்ளது. போதும், பிரியாணியின் புகழ் பாடியதற்கு. விஷயத்துக்கு வரலாம்.

Story image

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு, தனது செல்லிடப்பேசி வாயிலாக ஆர்டர் செய்ய முயன்றார். பிரியாணியை ஆர்டர் செய்துவிட்டார். ஆனால் என்ன? குடிபோதையில் இருந்ததால், மும்பையில் இருந்து கொண்டு, பெங்களூருவில் இருந்த மேகனா உணவகத்தில் அவர் பிரியாணி ஆர்டர் செய்யவும், ஆச்சரியப்படும் வகையில் அந்த ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்ன.. அந்த பிரியாணியின் விலை வெறும் ஜஸ்ட்... ரூ.2500 மட்டும்தான். பிறகு பெங்களூருவிலிருந்து வர  வேண்டாமா?

2500 பில் வந்த பிறகுதான், அப்பெண், தான் செய்த தவறை உணர்ந்திருக்கிறார். உடனடியாக அதனை ஒரு ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஜனவரி 21ஆம் தேதி பகிரப்பட்ட இந்தப் பதிவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். அது மட்டுமா தங்களது கருத்துகளையும் மாநில பேதம் பார்க்காமல் பகிர்ந்துள்ளனர்.

அந்த ஆர்டர் எடுக்கப்பட்டதுடன், சுபி, உங்களது வீட்டு வாசலில் பிரியாணி கிடைத்ததும் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் சொமாட்டோ கூறியிருந்ததுதான் அல்டிமேட்.

பிறகு அவர் ஆர்டர் செய்தபடியே பிரியாணி வந்து சேர்ந்தது. அதனையும் அவர் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.