ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கைத் தொடர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை நிறுத்தக்கோரி ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ஜூலை 7-ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதால் சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியானதுதான் என்று அந்த தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.
இதையும் படிக்கலாம்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி?
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன் தனது வாதத்தையும் கேட்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



