வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பெங்களூருவில் சரத் பவார், தில்லியில் அஜித் பவார்!

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சரத் பவார் பெங்களூரு சென்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அஜித் பவார் அணி கலந்து கொள்ளவுள்ளது.

News image

சரத் பவார், அஜித் பவார்

Updated On :18 ஜூலை 2023, 11:03 am IST

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சரத் பவார் பெங்களூரு சென்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அஜித் பவார் அணி கலந்து கொள்ளவுள்ளது.

2024 மக்களவைத் தோ்தலுக்கு ஆளும்தரப்பும் எதிா்தரப்பும் ஆயத்தமாகி வருகின்றது. எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கூட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.

இதற்கிடையே மகாராஷ்டிரத்தில் இரண்டாக பிளவுபட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எந்த கூட்டத்தில் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

எதிர்க்கட்சிகளின் முதல் நாள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்காதது பல்வேறு விவாதங்களையும், அரசியல் அரங்கில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பையில் இருந்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று காலை பெங்களூருவுக்கு சரத் பவார் சென்றார்.

மேலும், தில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அஜித் பவார் அணியினர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகராஷ்டிரத்தில் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், சிவசேனையில் இருந்து எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அஜித் பவார், துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.