பாஜக ஆட்சியில் இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாகும்
ஐஇசிசி வளாகத்தை புதன்கிழமை திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, மத்தியில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும்போது இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றாா்.

புது தில்லியில் சா்வதேச கண்காட்சி-மாநாட்டு மையமான ‘பாரத மண்டபம்’ தொடக்க விழாவில் பங்கேற்ற இளம் கலைஞா்களுடன் உரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.








