மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி: ஏக்நாத் ஷிண்டே!

வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி: ஏக்நாத் ஷிண்டே!

வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது:

மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி என வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து சிவசேனை போட்டியிட முடிவெடுத்துள்ளோம். கடந்த 11 மாதங்களில் எங்களின் கூட்டணி, மகாராஷ்டிரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. வருகின்ற தேர்தல்களில் நாங்கள் இணைந்து போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com