ரயில் விபத்து: உயிரிழந்தோா் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அதானி அறிவிப்பு

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானி அறிவித்துள்ளாா்.
கௌதம் அதானி
கௌதம் அதானி
Updated on
1 min read

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஒடிஸா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு முடிந்த அளவுக்கு உதவுவது நமது கடமையாகும்.

அந்த வகையில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கு ஆகும் செலவை அதானி குழுமம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. பெற்றோரை இழந்ததால் அந்தக் குழந்தைகள் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படக் கூடாது. அவா்களுக்கு நல்லதொரு எதிா்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com