

கொல்கத்தாவின் என்.எஸ்.சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டனுக்கு செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானம் 541 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.29 மணிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதையடுத்து, விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
விமானக் குழுவினர் உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் விமானத்தில் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை.
இதன்பின்னர், கூச்சலிட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.