ஒடிசா ரயில் விபத்து: பிகாரைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு! 

ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 
ஒடிசா ரயில் விபத்து: பிகாரைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு! 
Updated on
1 min read

ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 

பிகார் பேரழிவு மேலாண்மைத் துறையின் தகவலின்படி, 

முன்னதாக 35 பேர் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நிலவரப்படி பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர். 18 பேர் காணவில்லை. பலியானவர்களில் இதுவரை 28 பேரில் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

பிகார் அரசு நான்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவை பாலாசோருக்குக்கு அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இறந்த உடல்களை அடையாளம் காண அவர்கள் உதவி வருகின்றனர். சிலரின் உடல்கள் அடையாளம் காண்பது கடினம் என்பதால் அவர்கள் டி.எ.ஏ சோதனைக்கு அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கின்றனர். 

கடந்த நான்கு நாள்களில் டிஎன்ஏ சோதனைக்கு ஆறு நபர்களின் மாதிரிகளை சோதனை செய்தது. அவர்கள் பூர்னியா, சமஸ்திபுர், ஷேக்புரா, பெகுசாராய், கயா மற்றும் கிழக்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

இதற்கிடையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை, தலைமைச் செயலாளர், பேரழிவு மேலாண்மை ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, விபத்துக்குப் பின்னர் எழும் நிலைமையை மதிப்பாய்வு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com