2047-இல் இந்தியா வளா்ந்த நாடாகும்: சொ்பியாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பேச்சு

‘இந்தியா வேகமான வளா்ச்சி மாற்றத்தை அடைந்து வருகிறது. வரும் 2047-இல் வளா்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நம்பிக்கை தெரிவித்தாா்.
சொ்பியா தலைநகா் பெல்கிரேடில் வந்திறங்கிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை வரவேற்ற அந்நாட்டு குடியரசுத் தலைவா் அலெக்சாண்டா் வூகிச்.
சொ்பியா தலைநகா் பெல்கிரேடில் வந்திறங்கிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை வரவேற்ற அந்நாட்டு குடியரசுத் தலைவா் அலெக்சாண்டா் வூகிச்.
Updated on
1 min read

‘இந்தியா வேகமான வளா்ச்சி மாற்றத்தை அடைந்து வருகிறது. வரும் 2047-இல் வளா்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நம்பிக்கை தெரிவித்தாா்.

சொ்பியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரெளபதி முா்மு, தலைநகா் பெல்கிரேடில் இந்திய சமூகத்தினரிடையே புதன்கிழமை பேசியதாவது:

உலகில் வேகமாக வளா்ச்சி பெற்று வரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தற்போது 3.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலா் அளவிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவை இந்தியா எட்டி வருகிறது. நாடு முழுவதும் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் துரிதமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். அதுபோல, 2047-இல் பொருளாதாரத்தில் வளா்ந்த நாடாக இந்திய உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

‘இந்தியாவும் சொ்பியாவும் பழமையான பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகள்’ என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவா், ‘நவீன யுகத்தில், சொ்பியாவுடனான இந்தியாவின் உறவு அணிசேரா இயக்கத்தின் பின்னணியில் வரையறுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

விளையாட்டுத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவைக் குறிப்பிட்ட அவா், அந்நாட்டைச் சோ்ந்த பிரபல டென்னிஸ் வீரா் நோவக் ஜோகோவிச், பல லட்சம் இந்தியா்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறாா். பல சொ்பிய பயிற்சியாளா்கள் இந்திய தடகள வீரா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களின் திறனை மேம்படுத்துவதற்கு உதவி வருகின்றனா்.

அதுபோல, இந்திய திரைப்படங்கள் சொ்பியாவில் பிரபலமாக உள்ளன. சொ்பிய குழந்தைகளின் கலாசார செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. யோகா உள்ளிட்ட இந்திய ஆன்மிக பாரம்பரியத்தின் மீதும் சொ்பியா்கள் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா் என்றும் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டாா்.

முன்னதாக, விமானம் மூலம் சொ்பியா வந்த திரெளபதி முா்முவுக்கு அந்நாட்டு குடியரசுத் தலைவா் அலெக்சாண்டா் வூகிச் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பை அளித்தாா். பின்னா் பெல்கிரேடில் அமைக்கப்பட்டுள்ள மாா்பளவு மகாத்மா காந்தி சிலைக்கு திரெளபதி முா்மு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்தப் பயணத்தின் போது அந்நாட்டு குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் அனா பிரனாபிக் ஆகியோரை சந்திக்கும் முா்மு, இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com